செய்திகள்

மெக்சிகோ எல்லையில் ராணுவத்தை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு

Published On 2018-04-05 05:49 GMT   |   Update On 2018-04-05 05:49 GMT
மெக்சிகோ எல்லையில் மக்களின் ஊடுருவலை தடுப்பதற்காக அப்பகுதியில் ராணுவத்தை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவை ஒட்டி தென் பகுதியில் மெக்சிகோ நாடு உள்ளது. இங்கிருந்து பல்லாயிரக்கணக்கானோர் எல்லை தாண்டி வந்து அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். இதனால் அமெரிக்காவில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது.

இந்த ஊடுருவலை தடுப்பதற்காக ஏற்கனவே மொத்தம் உள்ள 3145 கிலோ மீட்டர் எல்லையில் சில பகுதிகளில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மீதி உள்ள தூரத்துக்கு தடுப்பு சுவர் அமைக்கப்படும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். இதற்கு மெக்சிகோ நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதையும் மீறி தடுப்பு சுவர் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.



அதற்கு முன்னதாக எல்லை முழுவதும் ராணுவத்தை நிறுத்த அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

விரைவில் இதற்கான திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கப்பட்டு எல்லை பாதுகாப்பு பணி ராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். இதற்கும் மெக்சிகோ நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. #tamilnews
Tags:    

Similar News