செய்திகள்

சிரியாவில் போராளிகள் வசமுள்ள பகுதிகளில் விமானப்படை தாக்குதல் - 18 பேர் பலி

Published On 2018-02-19 14:58 GMT   |   Update On 2018-02-19 14:58 GMT
சிரியா நாட்டில் ஆட்சியாளருக்கு எதிரான போராளிகள் வசமுள்ள பகுதிகளில் இன்று விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 18 பேர் உயிரிழந்தனர். #Syriabombardment
டமாஸ்கஸ்:

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக பல்வேறு புரட்சிப் படையினர் ஆயுதம் தாங்கிய  போராட்டங்களில் ஈடுபட்டு  வருகின்றனர்.

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டா பகுதியில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பது தொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து அங்குள்ள இரு போராளி குழுக்களுக்கிடையே மோதல்களும் நடந்து வருகின்றன. 

இந்நிலையில், பராடா நதிக்கரை ஓரத்தில் உள்ள கிழக்கு கவுட்டா பகுதியில் பதுங்கியுள்ள போராளிகள் மீது இன்று விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 18 பேர் உயிரிழந்தனர். #tamilnews #Syriabombardment
Tags:    

Similar News