செய்திகள்

பாகிஸ்தானில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு மரண தண்டனை

Published On 2018-02-17 14:56 GMT   |   Update On 2018-02-17 14:56 GMT
பாகிஸ்தானில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு லாகூர் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
லாகூர்:

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணமத்தில் உள்ள கசூர் மாவட்டத்தில் கடந்த மாதம் ஜைனப் (7) என்ற சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

அப்போது இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிறுமிக்கு நடத்திய உடற்கூறு ஆய்வில் அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டார் என்றும், சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதற்காக அறிகுறிகள் காணப்பட்டது என தெரியவந்தது. இச்சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

சிறுமி கொலை தொடர்பாக அந்தப் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அப்போது ஏற்பட்ட வன்முறையை ஒடுக்குவதற்கு போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். 

இதுதொடர்பாக, இம்ரான் அலி (24), என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஆட்கடத்தல்,  பாலியல் பலாத்காரம், கொலை, பயங்கரவாத வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற இம்ரான் அலிக்கு லாகூர் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக நீதிபதி கூறுகையில், இம்ரான் அலி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணம் செய்யப்பட்டுள்ளன. எனவே அவருக்கு மரண தண்டனை விதிக்கிறேன். மேலும், குற்றவாளிக்கு ரூ.20 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டுள்ளார். #Tamilnews
Tags:    

Similar News