செய்திகள்

பாரீஸ் நகரில் குடிபோதையில் 6 பேருக்கு கத்திக்குத்து

Published On 2018-02-14 23:29 GMT   |   Update On 2018-02-14 23:29 GMT
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரில், குடிபோதையில் இருந்த நபர் ஒருவர், சாலையில் நின்று கொண்டிருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் நடந்துள்ளது.
பாரீஸ்:

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரில், குடிபோதையில் இருந்த நபர் ஒருவர், சாலையில் நின்று கொண்டிருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் நடந்துள்ளது. குற்றச்செயல்கள் அதிகமாக நடக்கும் கேரே டு நார்ட் ரெயில் நிலையத்துக்கு அருகே இச்சம்பவம் நடந்தது.

6 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் நடந்த 2 மணி நேரத்துக்கு பிறகு, அந்த மர்ம நபர் மற்றொரு பகுதியில் பிடிபட்டார். அவர் குடிபோதையில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர் பயன்படுத்திய கத்தியும் அருகே கிடந்தது. அந்த ஆசாமியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். 
Tags:    

Similar News