செய்திகள்

இந்திய சிறைகளில் இருக்கும் 40 மியான்மர் கைதிகள் விடுதலை: பிரதமர் மோடி அறிவிப்பு

Published On 2017-09-06 09:11 GMT   |   Update On 2017-09-06 09:11 GMT
இந்திய சிறைகளில் இருக்கும் 40 மியான்மர் நாட்டு கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நய் பியி டா:

பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் இருந்து மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக நேற்று மியான்மர் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். தலைநகர் நய் பியி டாவில் பிரதமர் மோடிக்கு, மியான்மர் அதிபர் ஹிடின் கியாவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி, மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி-யை இன்று சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இந்த சந்திப்பின்போது 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்நிலையில், இந்திய சிறைகளில் இருக்கும் மியான்மர் நாட்டை சேர்ந்த 40 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில், இந்திய சிறைகளில் வாடும் 40 மியான்மர் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள். மேலும், மியான்மர் நாட்டு மக்களுக்கு உடனடி விசா வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News