செய்திகள்

லண்டனில் ஈரானிய அகதி மீது கொடூர தாக்குதல்: 9 பேர் கைது

Published On 2017-04-03 21:03 GMT   |   Update On 2017-04-03 21:03 GMT
லண்டனில் ஈரானிய அகதி மீது கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தாக்குதலில் தொடர்புடைய 9 பேரை கைது செய்தனர்.
லண்டன்:

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியான கிராய்டனில் உள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில், கடந்த 31-ந்தேதி ஈரானை சேர்ந்த 17 வயது அகதி வாலிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று, அந்த வாலிபரிடம், ‘நீ எங்கிருந்து வருகிறாய்?’ என்று கேட்டனர்.

அந்த வாலிபர் தனது நாடு மற்றும் இருப்பிடத்தை கூறியதும், அவர் அகதி என்பதை உறுதி செய்த அந்த கும்பல் திடீரென அந்த வாலிபரை கொடூரமாக தாக்கினர். இதில் அவரது தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தாக்குதலில் தொடர்புடைய 9 பேரை கைது செய்தனர். மீதமுள்ளவர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். இது ஒரு இனவெறி தாக்குதல் என போலீசார் தெரிவித்தனர். 

Similar News