செய்திகள்

அர்ஜென்டினாவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலி

Published On 2017-02-19 05:53 GMT   |   Update On 2017-02-19 05:53 GMT
அர்ஜென்டினாவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலியாகினர். விபத்துக்கு அபாயகரமான வளைவே காரணம் என போலீசார் தெரிவித்தனர்.

பியூனஸ் ஏர்ஸ்:

அர்ஜென்டினாவில் சிலி நாட்டின் எல்லையில் மென்டோஷா மாகாணம் உள்ளது. அங்குள்ள அகான் காகுவா மலைப்பகுதி சுற்றுலா தலமாகும்.

இங்கு பயணம் செய்த சுற்றுலா பஸ் ஒரு வளைவில் திரும்பிய போது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.

அதில் 19 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சைளிக்கப்படுகிறது. இறந்தவர்களில் 3 பேர் குழந்தைகள்.

பலியானவர்களில் பெரும் பாலானவர்கள் அர்ஜென்டினாவை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் சிலி, கொலம்பியா மற்றும் ஹைதியில் இருந்து வந்து குடியேறியவர்கள் ஆவர். விபத்துக்கு அபாயகரமான வளைவே காரணம் என போலீசார் தெரிவித்தனர்.

Similar News