செய்திகள்

அமெரிக்க வங்கியில் கொள்ளை முயற்சி தோல்வி: வாடிக்கையாளர்கள் சிறைபிடிப்பு

Published On 2016-12-01 18:07 GMT   |   Update On 2016-12-01 18:07 GMT
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வங்கியில் கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்ததது. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் வாடிக்கையாளர்கள் சிலரை சிறைபிடித்து வைத்துள்ளனர்.
புளோரிடா:

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வங்கி ஒன்றில் மர்ம நபர்கள் இன்று கொள்ளை அடிக்க முயன்றனர். ஆனால் கொள்ளையர்களின் முயற்சி தோல்வி அடைந்தது.

இதனையடுத்து கொள்ளையர்கள் வங்கிக்கு வந்த சிலரை பிணை கைதிகளாக பிடித்து வைத்தனர். இதனால் அந்த பகுதியில் லேசான பதற்றமான சூழல் ஏற்பட்டது.

கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக கருதப்படும் மர்மநபர் ஒருவரை புளோரிடா போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட மர்மநபரிடம்  விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து பிணை கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 11 பேரை புளோரிடா போலீசார் விடுவித்தனர். 

அமெரிக்காவில் வங்கியில் கொள்ளை முயற்சி தோல்வி அடைந்து, வாடிக்கையாளர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News