செய்திகள்
குழந்தைகள் உள்பட 30 பேரை கொன்று ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் குழந்தைகள் உள்பட 30 பேரை நேற்று பிணைக்கைதிகளாக கடத்திச் சென்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டதாக தெரியவந்துள்ளது.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் பலமாக காலூன்றிவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட நேற்று அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் நடத்திய வேட்டையில் ஐ.எஸ். இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவன் கொல்லப்பட்டான்.
இதற்கு பழிவாங்கும் வகையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கோர் மாகாணத்தின் தலைநகரான பிரோஸ் கோஹ் என்ற பகுதியில் இருந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 30 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றனர்.
அவர்கள் அனைவரையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்றுவிட்டதாகவும், பெரும்பாலும் ஆடு, மாடுகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர்களின் பிரேதங்கள் இன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் கோர் மாகாண கவர்னர் நசிர் காசே இன்று தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் பலமாக காலூன்றிவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட நேற்று அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் நடத்திய வேட்டையில் ஐ.எஸ். இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவன் கொல்லப்பட்டான்.
இதற்கு பழிவாங்கும் வகையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கோர் மாகாணத்தின் தலைநகரான பிரோஸ் கோஹ் என்ற பகுதியில் இருந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 30 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றனர்.
அவர்கள் அனைவரையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்றுவிட்டதாகவும், பெரும்பாலும் ஆடு, மாடுகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர்களின் பிரேதங்கள் இன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் கோர் மாகாண கவர்னர் நசிர் காசே இன்று தெரிவித்துள்ளார்.