செய்திகள்

ஜப்பானின் கட்சூரா பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு

Published On 2016-09-22 17:17 GMT   |   Update On 2016-09-22 17:17 GMT
ஜப்பானின் கட்சூரா பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.
டோக்கியா:

பசுபிக் கடல் பகுதியில் உள்ள நாடுகளில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக நிலநடுக்கம் வந்த வண்ணம் உள்ளது. தோராயமாக ரிக்டரில் 5 முதல் 6.5 வரை அளவிலான லேசான நிலநடுக்கங்கள் தொடர்ச்சியான ஒன்றாக மாறிவிட்டது.

இந்த நிலையில், ஜப்பானின் கட்சூரா மற்றும் சிபா ஆகிய பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கட்சூரா பகுதியில் இருந்து சுமார் 161 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஜப்பானில் 6.1 ஆக  நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News