தமிழ்நாடு

ரூ.1000 உரிமைத்தொகை பெறும் நிகழ்ச்சியில் முகக்கவசம் அணிந்து வந்த மகளிர்

Published On 2023-11-10 05:37 GMT   |   Update On 2023-11-10 05:37 GMT
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
  • அனைத்து பெண்களுக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டிருந்தது.

சென்னை:

சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டிருந்தது. அதை அனைவரும் அணிந்து விழாவில் அமர்ந்திருந்தனர்.

தற்போது பல பகுதிகளில் சளி, இருமல் போன்றவை பரவுவதால் அனைவரும் முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News