தமிழ்நாடு

வைத்திலிங்கம் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார்- கே.பி.முனுசாமி பேட்டி

Published On 2022-07-04 07:52 GMT   |   Update On 2022-07-04 07:52 GMT
  • அ.தி.மு.க. பற்றி குறை கூற டி.டி.வி.தினகரனுக்கு தகுதி இல்லை.
  • சசிகலா தான் அரசியலில் இருப்பதை காண்பிக்கவே கருத்து தெரிவித்து வருகிறார்.

சென்னை:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வைத்திலிங்கம் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். அதனால் அவர் அ.தி.மு.க. பொதுக்குழு நடக்காது என்று கூறி வருகிறார்.

அ.தி.மு.க. பற்றி குறை கூற டி.டி.வி.தினகரனுக்கு தகுதி இல்லை. தொடர்ந்து அவர் அ.தி.மு.க. பற்றி விமர்சனம் செய்தால் சட்ட படி நடவடிக்கை எடுப்போம். சசிகலா தான் அரசியலில் இருப்பதை காண்பிக்கவே கருத்து தெரிவித்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறி னார்.

Tags:    

Similar News