தமிழ்நாடு
ஆக்கிரமிப்பு யார் செய்தாலும் அகற்றப்படும்- அமைச்சர் துரைமுருகன்
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறப்பட்டுள்ளதாவது:-
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
நானோ அல்லது எதிர்க்கட்சித் தலைவரோ என யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அதை அகற்றுவேன்.
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.