தமிழ்நாடு

7 நாட்களுக்குள் நிவாரண தொகை... நெறிமுறை வெளியீடு

Published On 2023-12-14 07:07 GMT   |   Update On 2023-12-14 07:33 GMT
  • ரூ.6000 வெள்ள நிவாரணத் தொகையை பயோமெட்ரிக் முறையில் மட்டுமே வழங்க வேண்டும்.
  • நிவாரண தொகை வழங்கப்பட்டதும் பயனாளர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

சென்னை:

மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டதோடு மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளும் சேதம் அடைந்தன.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

இதற்கான டோக்கன் வருகிற 16-ந்தேதி முதல் வினியோகிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே இன்று பிற்பகல் முதல் டோக்கன் வழங்கப்படுகிறது.

நிவாரண நிதி வழங்குவது தொடர்பான நெறிமுறைகளை ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* நிவாரணத் தொகை விநியோகத்திற்கு ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் நான்கு பணியாளர்கள் பணியமர்த்த வேண்டும்.

* வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் நிவாரண தொகை வழங்க அறிவுறுத்தல்.

* ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 7 நாட்களுக்குள் நிவாரண தொகையை வழங்க வேண்டும்.

* டோக்கன்களை ரேஷன் ஊழியர்கள் தான் நேரில் சென்று வழங்க வேண்டும். மூன்றாம் நபரை பணியில் ஈடுபடுத்தக்கூடாது.

* டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாளில் வருலும் குடும்ப அட்டைதாரர்களை எக்காரணம் கொண்டும் ரொக்கத் தொகை இல்லையென திருப்பி அனுப்பக்கூடாது.

* ரூ.6000 வெள்ள நிவாரணத் தொகையை பயோமெட்ரிக் முறையில் மட்டுமே வழங்க வேண்டும்.

* நிவாரண தொகை வழங்கப்பட்டதும் பயனாளர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

* தினமும் காலை 9 மணி முதல் 1 மணி வரையும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரையும் நிவாரண தொகை வழங்கப்படும்.

Tags:    

Similar News