தமிழ்நாடு

சென்னையில் கனமழை- வானிலை மையம் அறிவிப்பு

Published On 2022-06-21 08:00 GMT   |   Update On 2022-06-21 10:35 GMT
  • ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும்.
  • சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

சென்னை:

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 15 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும்.

சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News