தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 13.83 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன- சுகாதாரத்துறை அமைச்சர்

Published On 2022-06-12 16:44 GMT   |   Update On 2022-06-12 16:44 GMT
  • சென்னையில் மட்டும் 3,300 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
  • ஆவடி மாநகராட்சி அருகில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முகாமை தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் இன்று 30-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம்கள் இரவு 7 மணி வரை நடைபெற்றது. மொத்தம் ஒரு லட்சம் இடங்களில் முகாம் நடைபெற்றது.

இதில் சென்னையில் மட்டும் 3,300 இடங்களில் நடைபெற்றது. இன்று காலையில் ஆவடி மாநகராட்சி அருகில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முகாமை தொடங்கி வைத்தார்.

அதன்படி, தமிழகத்தில் இன்று கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 13.83 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News