தமிழ்நாடு

மகன் வரவேற்பில் திக்குமுக்காடிய துரைமுருகன்

Published On 2022-10-15 10:21 GMT   |   Update On 2022-10-15 10:21 GMT
  • தி.மு.க. பொதுச்செயலாளராக 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார் அமைச்சர் துரைமுருகன்.
  • கரகாட்டம், புலியாட்டம், பூரணகும்ப மரியாதை என வரவேற்பு ஏற்பாடுகள் தடபுடலாக இருந்ததால் காட்பாடி நகரமே களைகட்டியது.

தி.மு.க. பொதுச்செயலாளராக 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார் அமைச்சர் துரைமுருகன். அதன்பிறகு முதல் முறையாக தனது சொந்த ஊரான காட்பாடிக்கு சென்றுள்ளார்.

அவரது மகனும் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் வாணவேடிக்கையுடன் கூடிய வரவேற்பை கொடுத்து துரைமுருகனை திக்குமுக்காட வைத்துவிட்டார். கரகாட்டம், புலியாட்டம், பூரணகும்ப மரியாதை என வரவேற்பு ஏற்பாடுகள் தடபுடலாக இருந்ததால் காட்பாடி நகரமே களைகட்டியது.

Tags:    

Similar News