தமிழ்நாடு

 தற்கொலைக்கு முயன்ற முனுசாமி- வீரம்மாள்.

பட்டா வழங்காததை கண்டித்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கணவன்- மனைவி தீக்குளிக்க முயற்சி

Published On 2023-11-20 10:48 GMT   |   Update On 2023-11-20 10:48 GMT
  • மாற்றுத்திறனாளி மனைவியுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • தாசில்தார் அலுவலகத்திலும் மனு அளித்தோம். கடந்த 4 ஆண்டு காலமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சேலம்:

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. மாற்றுத்திறனாளி. இவரது மனைவி வீரம்மாள்.

இவர்கள் இருவரும் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் முனுசாமி கூறியதாவது:-

எங்களுக்கு சொந்தமான 75 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு பட்டா கேட்டு மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், தாசில்தார் அலுவலகத்திலும் மனு அளித்தோம். கடந்த 4 ஆண்டு காலமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது குறித்து கேட்டதற்கு எங்கள் நிலத்திற்கு அருகில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் எங்கள் நிலத்தின் வழியாக வரவேண்டும் என்பதால் அவர் பட்டா வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தது தெரியவந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் முனுசாமி மற்றும் வீரம்மாள் ஆகியோரை சேலம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாற்றுத்திறனாளி மனைவியுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News