தமிழ்நாடு
சமையல் கியாஸ் விலை உயர்வு- மக்கள் நீதி மய்யம் கண்டனம்
உணவுகூட இல்லாமல் தவிக்கும் இலங்கை மக்களின் பரிதாப நிலையும், பொருளாதார வீழ்ச்சியும் சிலிண்டர் விலை உயர்வில் இருந்துதான் தொடங்கியது என மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஊடகப் பிரிவு மாநில செயலாளர் முரளி அப்பாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,000-த்தை தாண்டிவிட்டது. ‘‘எப்படி சமைப்பது எப்படி பிழைப்பது’’ என்று புலம்புகின்றனர் ஏழை எளிய நடுத்தர மக்கள்.
தற்போது உணவுகூட இல்லாமல் தவிக்கும் இலங்கை மக்களின் பரிதாப நிலையும், பொருளாதார வீழ்ச்சியும் சிலிண்டர் விலை உயர்வில் இருந்துதான் தொடங்கின.
அந்த நிலை இந்தியாவுக்கும் வந்துவிடக்கூடாது. உடனடியாக சிலிண்டர் விலை உயர்வை ரத்து செய்து, விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்காவிட்டால் மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களைத் தவிர்க்க முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.