தமிழ்நாடு
வீரவணக்க நாளில் திருக்குறளை தேசிய நூலாக்க உறுதி ஏற்போம்- டி.டி.வி. தினகரன் அறிக்கை
உயிருக்கு நிகரான நம் தாய்த்தமிழை உயர்த்தி பிடிக்க தம் இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு வீரவணக்கம்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உயிருக்கு நிகரான நம் தாய்த்தமிழை உயர்த்தி பிடிக்க தம் இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு வீரவணக்கம்.
இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் வழியில், தமிழை இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக்கவும், திருக்குறளை தேசிய நூலாக்கவும், உழைத்திட மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளில் உறுதி ஏற்றிடுவோம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.