தமிழ்நாடு
.

சேலத்தில் 19 வது கட்ட தடுப்பூசி முகாம்

Published On 2022-01-22 09:24 GMT   |   Update On 2022-01-22 09:24 GMT
சேலத்தில் 19-வது கட்டமாக தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுகொண்டனர்.
சேலம்:

தமிழகம் முழுவதும் கொரோனா 3-வது அலை  வேகமாக பரவி வருகிறது.  சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.  

பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.  15 வயதிற்கு மேற்பட்ட 25 லட்சத்து 70 ஆயிரத்து 70 பேருக்கு முதல் தவணையும், 16 லட்சத்து 68 ஆயிரத்து 534 பேருக்கு 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி  88 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 57 சதவீதம்  பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.  இதுதவிர  மாவட்டத்தில்  பூஸ்டர் தடுப்பூசியையும் சுமார் 10   ஆயிரம் போட்டுள்ளனர்.  தடுப்பூசி செலுத்துவதற்காக ஏற்கனவே 18 கட்ட மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இன்று 19-வது கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

மாவட்டத்தில் ஊரக பகுதியில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை, அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் முகாம் நடக்கிறது. 

இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து முதல் மற்றும் 2-ம் தவணை கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
Tags:    

Similar News