செய்திகள்
பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய விஜய் வசந்த்
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 86-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சென்னை பூந்தமல்லி சாலையில் உள்ள மாலைமலர் அலுவலகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அவரது திருவுருவப் படத்திற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் எம். எஸ். காமராஜ், வர்த்தக காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் தணிகாசலம், சென்னை மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர்கள் பெர்னட் ஜான்சன்,ஹேமனாத் ராகேஷ், உள்ளிட்டோரும் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தினர்.
இதையொட்டி சென்னை பூந்தமல்லி சாலையில் உள்ள மாலைமலர் அலுவலகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அவரது திருவுருவப் படத்திற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் எம். எஸ். காமராஜ், வர்த்தக காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் தணிகாசலம், சென்னை மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர்கள் பெர்னட் ஜான்சன்,ஹேமனாத் ராகேஷ், உள்ளிட்டோரும் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தினர்.