செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா குறித்து மாவட்டம் வாரியாக அறிக்கை தாக்கல் செய்க: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
கஞ்சா தொடர்பாக 1,386 வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 26,882 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் கஞ்சா வழக்கில் கைதானவர்கள் ஜாமீன் கோரிய வழக்கு விசாரணையின்போது, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா குறித்து மாவட்டம் வாரியாக அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒரு துறையின் மீது குற்றம் சுமத்துப்படும்போது அந்தத்துறை நேர்மையுடன் இருப்பதை உறுதி செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அரசு சார்பில், கஞ்சா தொடர்பாக 1,386 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 26,882 கிலோ கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்படும் கஞ்சாக்களை அழிக்க காவல்துறை தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.