செய்திகள்
கமல் ஹாசன்

வரும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் -கமல் ஹாசன்

Published On 2021-07-28 17:09 GMT   |   Update On 2021-07-28 17:09 GMT
ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா குறித்து தனது கருத்துக்களை கேட்ட மத்திய அரசுக்கு கமல் நன்றி தெரிவித்தார்.
சென்னை:

ஒளிப்பதிவுச் சட்டத் திருத்த மசோதா பற்றி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தனது கருத்தை நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்தார். பின்னர், சென்னைக்கு வந்த கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா குறித்து தனது கருத்துக்களை கேட்ட மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

மேலும், உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்றும் தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் இணைய வழி கலந்துரையாடல் கூட்டம் ஜூன் 26ஆம் தேதி நடைபெற்றது. அதில் வருகிற உள்ளாட்சித் தேர்லில் பெருவாரியான வெற்றியை பெற வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளை கமல் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News