செய்திகள்
முன்னாள் அமைச்சர் மோகன்

கள்ளக்குறிச்சி அருகே முன்னாள் அ.தி.மு.க. அமைச்சருக்கு கொரோனா

Published On 2021-04-07 04:44 GMT   |   Update On 2021-04-07 04:44 GMT
கள்ளக்குறிச்சி அருகே வடக்கனந்தல் பகுதியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மோகனுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி:

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அரசியல் பிரமுகர்களுக்கும் கொரோனா தொற்று பரவியது.

அதன்படி கள்ளக்குறிச்சி அருகே வடக்கனந்தல் பகுதியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மோகனுக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் அ.தி.மு.க.வில் அமைப்பு செயலாளராகவும், தேர்தல் வழிகாட்டு குழு உறுப்பினராகவும் உள்ளார்.

இவருக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. உடனே மோகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், டிரைவர்கள், வீட்டு பணியாளர்கள் என 14 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனை முடிவில் முன்னாள் அமைச்சர் மோகன், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 2 டிரைவர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News