செய்திகள்
கைது

கோவையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த தொழிலாளி கைது

Published On 2021-04-04 01:07 GMT   |   Update On 2021-04-04 01:07 GMT
கோவையில் மனநலம் பாதித்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை:

கோவையில் நடந்த இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை செல்வபுரம் தில்லைநகரை சேர்ந்தவர் திலீப்குமார் (வயது28). நகைபட்டறை தொழிலாளி. அந்த பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயது பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அந்த பெண்ணை திலீப்குமார், பாலியல் பலாத்காரம் செய்தார். அதை தனது செல்போனிலும் வீடியோவாக எடுத்து பதிவு செய்துள்ளார்.

இதற்கிடையே அந்த பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு, திலீப்குமாரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். பின்னர், அவர் வைத்திருந்த செல்போனை வாங்கி பார்த்தபோது, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காட்சிகள் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து திலீப்குமாரை செல்வபுரம் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீப்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்..

மனநலம் பாதித்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News