செய்திகள்
விபத்துக்குள்ளான கார்.

ராமநாதபுரம் அருகே கார் மீது அரசு பஸ் மோதி 2 பேர் பலி

Published On 2021-03-25 06:46 GMT   |   Update On 2021-03-25 06:46 GMT
ராமநாதபுரம் அருகே கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முனியா. இவரது மகன் முகேஸ்வரன்(வயது 25). இவர் தனது நண்பர்கள் சிவா, பிரபு, ஆனந்த் பாபு ஆகியோருடன் ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

ராம் நகர் பஸ் ஸ்டாப் அருகே வந்த போது எதிரே வந்த அரசு பஸ் கார் பயங்கரமாக மோதியது. இதில் காரை ஓட்டி வந்த முகேஸ்வரன் சம்பவ இடத்தில் பலியானார்.

காரில் சிக்கியிருந்த மற்ற 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி (வயது 27) உயிரிழந்தார். பிரபு, ஆனந்த் பாபு ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

இது குறித்து முகேஸ்வரன் தாய் பாண்டிச்செல்வி அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சை ஓட்டி வந்த பரமக்குடி அருகே மஞ்சூரை சேர்ந்த செல்வின் ரஞ்சித் சிங்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News