செய்திகள்
கைது

கியாஸ் சிலிண்டர்கள் திருடியவர் கைது

Published On 2021-01-09 12:07 GMT   |   Update On 2021-01-09 12:07 GMT
கியாஸ் சிலிண்டர்கள் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி:

சித்தூர் மாவட்டம் கலகடா மண்டலம் மகால்ராஜுபள்ளி அங்கன்வாடி மையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 கியாஸ் சிலிண்டர்கள் திருட்டுப் போனது. இதுகுறித்து அங்கன்வாடி மைய நிர்வாகி கலகடா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு கலகடாவில் சித்தூர்-கர்னூல் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள பஹுதா ஆற்றின் மேம்பாலம் அருகில் 2 கியாஸ் சிலிண்டர்களுடன் நின்றிருந்த ஒருவரை பிடித்து கலகடா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிபிரகாஷ்ரெட்டி விசாரித்தார்.

அவர், கே.வி. பள்ளி மண்டலம் மகால்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 38) எனத் தெரிய வந்தது. அவர், கலகடா அங்கன்வாடி மையத்தில் 2 கியாஸ் சிலிண்டர்களை திருடியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
Tags:    

Similar News