செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 9 ஆயிரத்து 314 பேர் - மாவட்ட வாரியாக விவரம்

Published On 2020-12-23 18:04 GMT   |   Update On 2020-12-23 18:04 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 9 ஆயிரத்து 314 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று 1 ஆயிரத்து 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 10 ஆயிரத்து 80 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 9 ஆயிரத்து 314 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

வைரஸ் பரவியவர்களில் இன்று 1 ஆயிரத்து 131 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 88 ஆயிரத்து 742 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 24 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் - 10
செங்கல்பட்டு - 559
சென்னை - 3,022
கோவை - 978
கடலூர் - 101
தர்மபுரி - 80
திண்டுக்கல் - 133
ஈரோடு - 309
கள்ளக்குறிச்சி - 20
காஞ்சிபுரம் - 282
கன்னியாகுமரி - 167
கரூர் - 84
கிருஷ்ணகிரி - 87
மதுரை - 239
நாகை - 114
நாமக்கல் - 196
நீலகிரி - 143
பெரம்பலூர் - 3
புதுக்கோட்டை - 66
ராமநாதபுரம் - 19
ராணிப்பேட்டை - 60
சேலம் - 310
சிவகங்கை - 43
தென்காசி - 38
தஞ்சாவூர் - 177
தேனி - 77
திருப்பத்தூர் - 22
திருவள்ளூர் - 469
திருவண்ணாமலை - 106
திருவாரூர் - 104
தூத்துக்குடி - 83
திருநெல்வேலி - 138
திருப்பூர் - 454
திருச்சி - 195
வேலூர் - 233
விழுப்புரம் - 88
விருதுநகர் - 94
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 3
உள்நாடு - 8
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

மொத்தம் - 9,314
Tags:    

Similar News