செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 35 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்

Published On 2020-10-21 18:20 GMT   |   Update On 2020-10-21 18:20 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 35 ஆயிரத்து 480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று 3 ஆயிரத்து 86 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 97 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 35 ஆயிரத்து 480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 4 ஆயிரத்து 301 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 50 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 780 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் - 177
செங்கல்பட்டு - 1,573
சென்னை - 11,425
கோவை - 3,752
கடலூர் - 939
தர்மபுரி - 758
திண்டுக்கல் - 328
ஈரோடு - 916
கள்ளக்குறிச்சி - 295
காஞ்சிபுரம் - 656
கன்னியாகுமரி - 670
கரூர் - 294
கிருஷ்ணகிரி - 691
மதுரை - 736
நாகை - 508
நாமக்கல் - 804
நீலகிரி - 441
பெரம்பலூர் - 83
புதுக்கோட்டை - 321
ராமநாதபுரம் - 171
ராணிப்பேட்டை - 248
சேலம் - 1,938
சிவகங்கை - 160
தென்காசி - 149
தஞ்சாவூர் - 460
தேனி - 226
திருப்பத்தூர் - 284
திருவள்ளூர் - 1,345
திருவண்ணாமலை - 578
திருவாரூர் - 507
தூத்துக்குடி - 503
திருநெல்வேலி - 472
திருப்பூர் - 1,108
திருச்சி - 603
வேலூர் - 647
விழுப்புரம் - 525
விருதுநகர் - 175
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 3
உள்நாடு - 11
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

மொத்தம் - 35,480
Tags:    

Similar News