செய்திகள்
கட்டிவைக்கப்பட்டிருந்த பனியன் நிறுவன மேலாளர் சிவக்குமார்.

பாலியல் தொல்லை கொடுத்த பனியன் நிறுவன அதிகாரியை அடித்து உதைத்த இளம்பெண்கள்

Published On 2020-09-30 03:07 GMT   |   Update On 2020-09-30 03:07 GMT
பல்லடம் அருகே பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன அதிகாரியை இளம்பெண்கள் இருவர் அடித்து உதைத்தனர். இந்த வீடியோ காட்சி வாட்ஸ்அப்பில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் அவினாசி சூளை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 42). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் மதுரையை சேர்ந்த 24 வயது மற்றும் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய 2 பெண்கள் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் சிவக்குமார் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க அந்த 2 பெண்களும் திட்டமிட்டனர்.

கடந்த 14-ந் தேதி சிவகுமாரை பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் பாச்சாங்காட்டுப்பாளையம் குட்டை காட்டுப்பகுதிக்கு உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி 2 பெண்களும் அழைத்து சென்றனர். அப்போது இருவரும் சேர்ந்து சிவக்குமாரின் முகத்தில் மிளகாய் பொடி தூவி அடித்து உதைத்து கட்டிப்போட்டனர். தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அந்த இளம்பெண்கள் கொடுத்த புகாரின் பெயரில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். அதுபோல சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் 2 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களையும் கைது செய்தனர்.

தற்போது 3 பேரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இதற்கிடையே சிவக்குமார் மீது மிளகாய் பொடி தூவி இளம்பெண்கள் அடித்து உதைத்த வீடியோ காட்சி வாட்ஸ் அப்பில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Tags:    

Similar News