செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 46 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்

Published On 2020-09-27 16:39 GMT   |   Update On 2020-09-27 16:39 GMT
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 341 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 791 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 808 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 341 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 706 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 313 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் - 173
செங்கல்பட்டு - 2,358
சென்னை - 10,656
கோவை - 4,981
கடலூர் - 1,498
தர்மபுரி - 1,031
திண்டுக்கல் - 479
ஈரோடு - 1,074
கள்ளக்குறிச்சி - 511
காஞ்சிபுரம் - 944
கன்னியாகுமரி - 980
கரூர் - 486
கிருஷ்ணகிரி - 828 
மதுரை - 738
நாகை - 573
நாமக்கல் - 1,021
நீலகிரி - 971
பெரம்பலூர் - 128
புதுக்கோட்டை - 741
ராமநாதபுரம் - 154
ராணிப்பேட்டை - 444
சேலம் - 2,807
சிவகங்கை - 268
தென்காசி - 467
தஞ்சாவூர் - 1,220
தேனி - 546
திருப்பத்தூர் - 575
திருவள்ளூர் - 1,596
திருவண்ணாமலை - 927
திருவாரூர் - 1,068
தூத்துக்குடி - 605
திருநெல்வேலி - 904
திருப்பூர் - 1,667
திருச்சி - 778
வேலூர் - 903
விழுப்புரம் - 1,003
விருதுநகர் - 263
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 2
உள்நாடு - 25
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

மொத்தம் - 46,341
Tags:    

Similar News