செய்திகள்
கோப்பு படம்

சென்னையில் மட்டும் 10 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம்

Published On 2020-09-26 17:42 GMT   |   Update On 2020-09-26 17:42 GMT
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 647 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 75 ஆயிரத்து 17 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 612 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 448 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 233 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் - 141
செங்கல்பட்டு - 2,353
சென்னை - 10,311
கோவை - 4,859
கடலூர் - 1,559
தர்மபுரி - 1,122
திண்டுக்கல் - 560
ஈரோடு - 1,138
கள்ளக்குறிச்சி - 564
காஞ்சிபுரம் - 1,178
கன்னியாகுமரி - 938
கரூர் - 509
கிருஷ்ணகிரி - 829 
மதுரை - 721
நாகை - 613
நாமக்கல் - 968
நீலகிரி - 872
பெரம்பலூர் - 124
புதுக்கோட்டை - 720
ராமநாதபுரம் - 170
ராணிப்பேட்டை - 457
சேலம் - 2,681
சிவகங்கை - 298
தென்காசி - 517
தஞ்சாவூர் - 1,236
தேனி - 474
திருப்பத்தூர் - 583
திருவள்ளூர் - 1,618
திருவண்ணாமலை - 1,002
திருவாரூர் - 1,057
தூத்துக்குடி - 632
திருநெல்வேலி - 890
திருப்பூர் - 1,719
திருச்சி - 785
வேலூர் - 883
விழுப்புரம் - 971
விருதுநகர் - 243
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 2
உள்நாடு - 37
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

மொத்தம் - 46,336
Tags:    

Similar News