செய்திகள்
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 46 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 752 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 511 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 799 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 53 ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 434 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-
அரியலூர் - 206
செங்கல்பட்டு - 2,035
சென்னை - 10,436
கோவை - 3,549
கடலூர் - 2,818
தர்மபுரி - 776
திண்டுக்கல் - 723
ஈரோடு - 1,055
கள்ளக்குறிச்சி - 944
காஞ்சிபுரம் - 1,264
கன்னியாகுமரி - 754
கரூர் - 418
கிருஷ்ணகிரி - 790
மதுரை - 692
நாகை - 1,166
நாமக்கல் - 893
நீலகிரி - 591
பெரம்பலூர் - 111
புதுக்கோட்டை - 785
ராமநாதபுரம் - 247
ராணிப்பேட்டை - 647
சேலம் - 2,045
சிவகங்கை - 233
தென்காசி - 588
தஞ்சாவூர் - 890
தேனி - 759
திருப்பத்தூர் - 519
திருவள்ளூர் - 2,043
திருவண்ணாமலை - 1,486
திருவாரூர் - 723
தூத்துக்குடி - 709
திருநெல்வேலி - 1,025
திருப்பூர் - 1,822
திருச்சி - 854
வேலூர் - 1,003
விழுப்புரம் - 868
விருதுநகர் - 386
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 6
உள்நாடு - 51
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2
மொத்தம் - 46,912