செய்திகள்
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 53 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 53 ஆயிரத்து 99 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 914 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 2 ஆயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 99 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
குறிப்பாக சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் போன்ற தென்மாவட்டங்களில் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 37 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 44 ஆயிரத்து 675 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 41 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-
அரியலூர் - 305
செங்கல்பட்டு - 2,903
சென்னை - 11,328
கோவை - 1,561
கடலூர் - 2,267
தர்மபுரி - 131
திண்டுக்கல் - 714
ஈரோடு - 394
கள்ளக்குறிச்சி - 826
காஞ்சிபுரம் - 2,728
கன்னியாகுமரி - 1,787
கரூர் - 313
கிருஷ்ணகிரி - 516
மதுரை - 1,061
நாகை - 558
நாமக்கல் - 313
நீலகிரி - 135
பெரம்பலூர் - 237
புதுக்கோட்டை - 1,056
ராமநாதபுரம் - 408
ராணிப்பேட்டை - 1,391
சேலம் - 1,123
சிவகங்கை - 446
தென்காசி - 1,232
தஞ்சாவூர் - 1,277
தேனி - 3,049
திருப்பத்தூர் - 540
திருவள்ளூர் - 3,499
திருவண்ணாமலை - 1,847
திருவாரூர் - 281
தூத்துக்குடி - 1,793
திருநெல்வேலி - 2,180
திருப்பூர் - 359
திருச்சி - 1,016
வேலூர் - 1,211
விழுப்புரம் - 499
விருதுநகர் - 1,595
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 84
உள்நாடு - 134
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2
மொத்தம் - 53,099