செய்திகள்
திருமாவளவனின் சகோதரி உயிரிழப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சகோதரி உயிரிழப்புக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பானுமதி கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சகோதரி பானுமதி கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில் பானுமதி உயிரிழந்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் சகோதரி திருமதி.பானுமதி என்கிற வான்மதி அவர்கள் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். pic.twitter.com/HrKMBjtiaZ
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 6, 2020
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பானுமதி கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாக குறிப்பிட்டுள்ளார்.