செய்திகள்
ஊரடங்கு உத்தரவு

பாடாலூரில் இன்று முதல் முழு ஊரடங்கு

Published On 2020-08-05 06:43 GMT   |   Update On 2020-08-05 11:51 GMT
பாடாலூர் கிராமத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் இன்று முதல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளனர்.
பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது. இதனால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வணிகர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து, அப்பகுதியில் இன்று(புதன்கிழமை) முதல் தொடர்ந்து 6 நாட்கள் முழு ஊரடங்கு கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளனர். எனவே இப்பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை தவிர்த்து, மற்ற கடைகள், வணிகம் சார்ந்த நிறுவனங்கள் செயல்படாது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News