செய்திகள்
கோப்பு படம்

சென்னையில் 1,074 பேருக்கு இன்று புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக விவரம்

Published On 2020-08-01 18:02 GMT   |   Update On 2020-08-01 18:02 GMT
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 879 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 5 ஆயிரத்து 822 பேர். 

விமான நிலைய கண்காணிப்பில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 8 பேர், உள்நாட்டில் இருந்து வந்தவர்கள் 27 பேர் ஆவர்.

மேலும், சாலைமார்க்கமாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த மாவட்டம் வந்தவர்களில் 22 பேர் ஆகும்.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 51 ஆயிரத்து 738 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 56 ஆயிரத்து 738 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 90 ஆயிரத்து 966 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 4,034 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர் - 32
செங்கல்பட்டு - 314
சென்னை - 1,074
கோவை - 238
கடலூர் - 182
தர்மபுரி - 9
திண்டுக்கல் - 81
ஈரோடு - 8
கள்ளக்குறிச்சி - 60
காஞ்சிபுரம் - 368
கன்னியாகுமரி - 198
கரூர் - 36
கிருஷ்ணகிரி - 74
மதுரை - 166
நாகை - 37
நாமக்கல் - 32
நீலகிரி - 36
பெரம்பலூர் - 20
புதுக்கோட்டை - 91
ராமநாதபுரம் - 37
ராணிப்பேட்டை - 116
சேலம் - 51
சிவகங்கை - 61
தென்காசி - 178
தஞ்சாவூர் - 167
தேனி - 327
திருப்பத்தூர் - 22
திருவள்ளூர் - 305
திருவண்ணாமலை - 242
திருவாரூர் - 45
தூத்துக்குடி - 243
திருநெல்வேலி - 181
திருப்பூர் - 36
திருச்சி - 136
வேலூர் - 197
விழுப்புரம் - 158
விருதுநகர் - 286
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 8
உள்நாடு - 27
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

மொத்தம் - 5,879
Tags:    

Similar News