செய்திகள்
தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி

ஓகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழா ரத்து- ஆட்சியர் அறிவிப்பு

Published On 2020-07-31 10:15 GMT   |   Update On 2020-07-31 10:15 GMT
ஒகேனக்கலில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தர்மபுரி:

கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கை வருகிற ஆகஸ்டு 31-ந் தேதி வரை மேலும் ஒரு மாதம் நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டித்ததால் ஆடிப்பெருக்கு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News