செய்திகள்
கோப்பு படம்

53 ஆயிரத்தை கடந்தது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை - மாவட்ட வாரியாக விவரம்

Published On 2020-07-26 17:15 GMT   |   Update On 2020-07-26 17:15 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 53 ஆயிரத்து 703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 6 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 471 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 526 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று மேலும் 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 494 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் - 129
செங்கல்பட்டு - 3,141
சென்னை - 13,744
கோவை - 1,491
கடலூர் - 799
தர்மபுரி - 396
திண்டுக்கல் - 600
ஈரோடு - 167
கள்ளக்குறிச்சி - 935
காஞ்சிபுரம் - 2,640
கன்னியாகுமரி - 1,781
கரூர் - 158
கிருஷ்ணகிரி - 365 
மதுரை - 1,952
நாகை - 248
நாமக்கல் - 271
நீலகிரி - 210
பெரம்பலூர் - 102
புதுக்கோட்டை - 665
ராமநாதபுரம் - 795
ராணிப்பேட்டை - 2,002
சேலம் - 894
சிவகங்கை - 631
தென்காசி - 801
தஞ்சாவூர் - 963
தேனி - 1,741
திருப்பத்தூர் - 370
திருவள்ளூர் - 3,771
திருவண்ணாமலை - 1,165
திருவாரூர் - 570
தூத்துக்குடி - 2,314
திருநெல்வேலி - 1,401
திருப்பூர் - 314
திருச்சி - 1,201
வேலூர் - 1,171
விழுப்புரம் - 876
விருதுநகர் - 2,612
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 215
உள்நாடு - 91
ரெயில் நிலைய கண்காணிப்பு - 11

மொத்தம் - 53,703

Tags:    

Similar News