செய்திகள்
கோப்பு படம்

ஒரே நாளில் 3 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் - 92 ஆயிரத்தை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை

Published On 2020-07-13 16:43 GMT   |   Update On 2020-07-13 16:43 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 35 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் மாநிலத்தில் வைரசில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்தை கடந்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 328 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 798 ஆக அதிகரித்துள்ளது.  

இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 48 ஆயிரத்து 196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு
சிகிச்சைபெறுபவர்களும் உள்ளடக்கம். 

மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 2,032 பேர் பலியாகியுள்ளனர்.

ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 3 ஆயிரத்து 35 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 567 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-

அரியலூர் - 459
செங்கல்பட்டு - 4,528
சென்னை - 60,694
கோவை - 321
கடலூர் - 1,118
தர்மபுரி - 97
திண்டுக்கல் - 568
ஈரோடு - 176
கள்ளக்குறிச்சி - 1,018
காஞ்சிபுரம் - 1,354
கன்னியாகுமரி - 492
கரூர் - 141
கிருஷ்ணகிரி - 163 
மதுரை - 2,616
நாகை - 181
நாமக்கல் - 96
நீலகிரி - 93
பெரம்பலூர் - 164
புதுக்கோட்டை - 387
ராமநாதபுரம் - 785
ராணிப்பேட்டை - 725
சேலம் - 970
சிவகங்கை - 537
தென்காசி - 325
தஞ்சாவூர் - 421
தேனி - 671
திருப்பத்தூர் - 234
திருவள்ளூர் - 4,154
திருவண்ணாமலை - 1,771
திருவாரூர் - 469
தூத்துக்குடி - 1,095
திருநெல்வேலி - 868
திருப்பூர் - 177
திருச்சி - 879
வேலூர் - 1,072
விழுப்புரம் - 993
விருதுநகர் - 983
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 267
உள்நாடு - 179
ரெயில் நிலைய கண்காணிப்பு - 326

மொத்தம் - 92,567
Tags:    

Similar News