செய்திகள்
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 48 ஆயிரம் பேர் - மாவட்டவாரியாக விவரம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 48 ஆயிரத்து 196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 798 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 48 ஆயிரத்து 196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 92 ஆயிரத்து 567 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,032 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-
அரியலூர் - 53
செங்கல்பட்டு - 3,589
சென்னை - 16,601
கோவை - 960
கடலூர் - 427
தர்மபுரி - 160
திண்டுக்கல் - 213
ஈரோடு - 239
கள்ளக்குறிச்சி - 823
காஞ்சிபுரம் - 2,573
கன்னியாகுமரி - 993
கரூர் - 56
கிருஷ்ணகிரி - 95
மதுரை - 3,803
நாகை - 192
நாமக்கல் - 92
நீலகிரி - 128
பெரம்பலூர் - 12
புதுக்கோட்டை - 278
ராமநாதபுரம் - 1,069
ராணிப்பேட்டை - 897
சேலம் - 988
சிவகங்கை - 340
தென்காசி - 394
தஞ்சாவூர் - 279
தேனி - 1,173
திருப்பத்தூர் - 196
திருவள்ளூர் - 2,647
திருவண்ணாமலை - 1,368
திருவாரூர் - 297
தூத்துக்குடி - 1,274
திருநெல்வேலி - 996
திருப்பூர் - 128
திருச்சி - 698
வேலூர் - 1,824
விழுப்புரம் - 590
விருதுநகர் - 1,099
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 323
உள்நாடு - 233
ரெயில் நிலைய கண்காணிப்பு - 96
மொத்தம் - 48,196