செய்திகள்
கோப்புப்படம்

திண்டுக்கல்லில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு

Published On 2020-07-12 03:20 GMT   |   Update On 2020-07-12 03:20 GMT
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்றுவரை 756 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 516 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 232 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று வரை கொரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

திண்டுக்கலை சேர்ந்த 65 வயது மற்றும் 63 வயது மூதாட்டி, பண்ணைபட்டியை சேர்ந்த 70 வயது முதியவர் என 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 
Tags:    

Similar News