செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

திருவாரூர் மாவட்டத்தில் 6 வி.ஏ.ஓ.க்களுக்கு கொரோனா தொற்று

Published On 2020-07-09 07:10 GMT   |   Update On 2020-07-09 07:10 GMT
திருவாரூர் மாவட்டத்தில் 6 வி.ஏ.ஓ.க்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர்:

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 72,500 ஆக உள்ளது. சென்னையில் தற்போது 21,766 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆரம்ப கட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் மிகக் குறைவாகவே இருந்தது.  ஆனால் கடந்த சில தினங்களில் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்கிளல் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 614 ஆக உள்ளது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கூத்தாநல்லூரில் ஒரு வட்டாட்சியர் மற்றும் 6 வி.ஏ.ஓ.வுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News