செய்திகள்
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 46 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரங்கள்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 46 ஆயிரத்து 860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 62 ஆயிரத்து 778 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-
அரியலூர் - 21
செங்கல்பட்டு - 3,068
சென்னை - 24,890
கோவை - 464
கடலூர் - 365
தர்மபுரி - 69
திண்டுக்கல் - 373
ஈரோடு - 162
கள்ளக்குறிச்சி - 686
காஞ்சிபுரம் - 1,531
கன்னியாகுமரி - 310
கரூர் - 37
கிருஷ்ணகிரி - 110
மதுரை - 2,975
நாகை - 171
நாமக்கல் - 18
நீலகிரி - 75
பெரம்பலூர் - 12
புதுக்கோட்டை - 236
ராமநாதபுரம் - 941
ராணிப்பேட்டை - 606
சேலம் - 842
சிவகங்கை - 327
தென்காசி - 240
தஞ்சாவூர் - 184
தேனி - 634
திருப்பத்தூர் - 169
திருவள்ளூர் - 1,650
திருவண்ணாமலை - 1,342
திருவாரூர் - 191
தூத்துக்குடி - 311
திருநெல்வேலி - 350
திருப்பூர் - 79
திருச்சி - 485
வேலூர் - 1,347
விழுப்புரம் - 565
விருதுநகர் - 502
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 196
உள்நாடு - 236
ரெயில் நிலைய கண்காணிப்பு - 92
மொத்தம் - 46,860