செய்திகள்
ராஜபாளையம் அருகே சேத்தூர் ஊரக காவல் நிலைய எழுத்தர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று வரை 782 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 346 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், ராஜபாளையம் அருகே சேத்தூர் ஊரக காவல் நிலைய எழுத்தர் அய்யனாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
காவலர் கொரோனாவுக்கு உயிரிழந்ததை அடுத்து விருதுநகரில் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று வரை 782 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 346 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், ராஜபாளையம் அருகே சேத்தூர் ஊரக காவல் நிலைய எழுத்தர் அய்யனாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
காவலர் கொரோனாவுக்கு உயிரிழந்ததை அடுத்து விருதுநகரில் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.