செய்திகள்
பெட்ரோல் பங்க்

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை

Published On 2020-06-24 02:52 GMT   |   Update On 2020-06-24 02:52 GMT
சென்னையில் 17 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7.50 ரூபாய் மற்றும் டீசல் லிட்டருக்கு 8.55 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சென்னை:

இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றிமைத்து வருகின்றன. ஊரடங்கின் காரணமாக பெட்ரோல், டீசலின் தேவை குறைந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் 82 நாட்கள் விலையை குறைக்காமல் இருந்தன.

82 நாட்களுக்கு பிறகு கடந்த 7-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. 

17வது நாளாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. சென்னையில் பெட்ரோல் 17 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 83.04 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 47 காசுகள் அதிகரித்து 76.77 ரூபாய்க்கும் விற்பனையானது. 

17 நாட்களில் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 7.50 ரூபாய் மற்றும் டீசல் லிட்டருக்கு 8.55 ரூபாய் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 17 நாட்கள் விலை உயர்வுக்கு பிறகு சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.

டெல்லியில் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.79.76 ஆக உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 48 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.79.88 ஆக உள்ளது.
Tags:    

Similar News