செய்திகள்
ஜிகே வாசன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்- ஜி.கே.வாசன்

Published On 2020-06-15 13:05 GMT   |   Update On 2020-06-15 13:05 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலக அளவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் கடந்த 8 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கின்றது. குறிப்பாக நடுத்தர மக்களை அதிகம் பாதிக்கின்றது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு பலவகையில் இன்னலுக்கு ஆளாகி உள்ள மக்களுக்கு மேலும் சிரமத்தை அளிப்பதாக அமைந்து விடக்கூடாது. எனவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News