செய்திகள்
கைது

திருப்பூரில் சிறுமியிடம் சில்மி‌ஷம்- காவலாளி போக்சோவில் கைது

Published On 2020-05-17 10:51 GMT   |   Update On 2020-05-17 10:51 GMT
திருப்பூரில் 10 வயது சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்த காவலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர்:

திருப்பூர் அனுப்பர் பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கர்(வயது40). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது வீட்டின் அருகே 10 வயது சிறுமி வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தார். அப்போது பாஸ்கர் சிறுமியிடம் சாக்லெட் வாங்கி தருவதாக நைசாக பேசி சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அங்கு சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அவரிடமிருந்து தப்பி வீட்டிற்கு வந்தார். தனக்கு நடந்த சம்பவங்கள் குறித்து பெற்றோரிடம் கூறினார். அவர்கள் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் காவலாளி பாஸ்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News