செய்திகள்
மருத்துவமனை

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக வல்லுனர் குழு ஆய்வு

Published On 2020-04-21 12:51 GMT   |   Update On 2020-04-21 12:52 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக வல்லுனர்குழு ஆய்வு செய்தனர்.
வாலாஜா:

ராணிப்பேட்டை மாவட்டம் ரெட்சோனில் இருப்பதால் வாலாஜா அரசு தலைமை மருத்துவ மனையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக வல்லுநர் குழு நிர்மல் மற்றும் யுவராஜ், டாக்டர் மீனா நேற்று ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு, அவர்களுக்கு அளிக்கும் சிகிச்சைமுறை, உணவு வழங்கும் முறை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

மேலும் கொரோனா தொற்று அதிகமானால் அவர்களை அனுமதிக்க போதிய வசதிகள் உள்ளதா என பழைய கட்டிட வளாகத்தில் புதியதாக கட்டியுள்ள கட்டிடத்தையும் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது வாலாஜா மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சிங்காரவேலு கொரோனா கட்டுப்பாட்டு அறை தாசில்தார் கோபாலகிருஷ்ணன், கொரோனா மாவட்ட தொடர்பு அதிகாரி பிரகாஷ் அய்யப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த ஆய்வில் முன்னதாக மேல்விஷாரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.
Tags:    

Similar News